Tuesday, March 3, 2026
Homeசெய்திகள்சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டது!

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரகிரகணம், சூர்ய கிரகணத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு கோயிலை மூடுவது வழக்கம்.

அவ்வாறு இன்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இரவு முதல் காத்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் செய்து வைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் கோயில் வளாகம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டு காலை 8.30 மணிக்கு கோயில் மூலவர் சன்னதி முதல் ராஜகோபுரம் வரை அனைத்து கதவுகளும் மூடப்பட்டது.

சந்திரகிரகணம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு கிரகண பரிகார பூஜை மேற்கொண்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments