ஈரானைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் ‘டாட்டாலூ’ என அழைக்கப்படும் அமீர் ஹொசைன் மக்சௌத்லூவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அரசியல் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்து பேசிவந்த அமீர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அமீருக்கு மரண தண்டனை விதித்து ஈரான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
