சென்னை காசிமேட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை களைகட்டும்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அதிக அளவில் கரைக்கு திரும்பிய விசைபடகுகளால் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
இதில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் மற்றும் பெரிய,சிறிய வியாபாரிகள் குவிந்தனர். மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் சென்னை காசிமேட்டில் மீன்களின் விலையானது குறைந்து உள்ளதால் மீன் பிரியர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

