காளம்பாளையத்தில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மதுரையில் தயாரிக்கப்பட்ட மாசில்லா விதை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 18ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, கோவையில், பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காளம்பாளையத்தில், 5 இளைஞர்கள் இணைந்து துவங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் மதுரையில் முற்றிலும் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விதை விநாயகர் சிலையை விற்பனை செய்து வருகின்றனர்.
