Wednesday, April 29, 2026
Homeஆன்மீகம்திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை பிரம்மாண்டமான தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.

திருவிழாவின் 9-ஆம் நாளான இன்று, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் தாயுமானசுவாமியும், மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயாரும் எழுந்தருள, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் “நமச்சிவாய” கோஷமிட்டபடி வடம் பிடித்துத் தேரை இழுத்தனர். மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நான்கு உள்வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த தேர்களைக் காண திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

தேரோட்டப் பாதையெங்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சிகர நிகழ்வான இந்தத் தேரோட்டத்தைத் தொடர்ந்து, நாளை தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments