Home ஆன்மீகம் திருமலையில் ஸ்ரீ பத்மாவதி–ஸ்ரீநிவாசர் கல்யாண உற்சவம் கோலாகல நிறைவு!

திருமலையில் ஸ்ரீ பத்மாவதி–ஸ்ரீநிவாசர் கல்யாண உற்சவம் கோலாகல நிறைவு!

திருமலையில் கடந்த மூன்று நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த ஸ்ரீ பத்மாவதி சீனிவாச கல்யாண உற்சவம் (பரிநய உற்சவம்), திங்கட்கிழமை மாலை கோலாகலமாக நிறைவடைந்தது.

இறுதி நாளான நேற்று மாலை, ஸ்ரீ மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நாராயணகிரி பூங்காவிற்கு ஊர்வலமாக வந்தடைந்தார்; அதே நேரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்கள் தனித்தனி பல்லக்குகளில் பத்மாவதி பரிநய மண்டபத்திற்கு வருகை தந்தனர்.

அங்கு வேத மந்திரங்கள் முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் சுவாமிக்கும் தாயார்களுக்கும் இடையே திருக்கல்யாண வைபவங்கள் சாஸ்திரப்படி சிறப்பாக நடைபெற்றன.

இந்தத் தெய்வீக நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து நெகிழ்ந்தனர்.

Exit mobile version