தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் பிரதீப் ஜான். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான், “கடலோர மாவட்டங்களில் இன்று தொடர்ந்து மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு முழுவதும் 15ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்” என கூறியுள்ளார்.

