பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளிபடுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அடையாளங்களை வெளிப்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
