Home Uncategorized இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் ஜூன் 2 அன்று பாராட்டு விழா

இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் ஜூன் 2 அன்று பாராட்டு விழா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் ஜூன் 2 அன்று பாராட்டு விழா நடத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். சிம்பொனி இசை நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்துமாறு விசிக தலைவர் சிந்தனைச் செல்வன் கேட்ட நிலையில், மாநில அளவிலான பாராட்டு விழாவே முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இளையராஜாவின் திரையிசைப் பயணத்தின் 50 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூன் 2-ல் அரசு சார்பில் இந்த நிகழ்வு நடைபெறும் என முதல்வர் தெரிவித்தார்.

Exit mobile version