கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனமே வைரஸ்களால் ஏற்படும் நோய் தொற்று இனி அதிகமாகும் என கூறியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் இருப்பது உண்மை தான். கொரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தால் வைரஸ் தாக்குதலில் தற்காத்துக் கொள்ள முடியும்’ என பேசினார்.
