இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 7800 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்த தங்களது முதலீட்டை சீன பங்குச்சந்தைக்கு திருப்பிவிட்டன அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.94,000 பங்குகளை விற்றதால் சரிவு ஏற்பட்டுள்ளது.
