இந்தியாவை விட்டு சீனா பக்கம் செல்லும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் அக்டோபர் 1 முதல் இன்று வரை சுமார் ரூ.74,729 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் விற்றுள்ளனர்
இந்திய சந்தையில் தங்களின் பங்குகளை குறைத்து வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சீன பங்குச் சந்தைகளில் தங்களின் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன
இந்தியாவை ஒப்பிடுகையில் சீனாவின் பங்குகள் விலை தற்போது குறைவாக இருப்பதும், இஸ்ரேல்-ஈரான் இடையிலான புவிசார்-அரசியல் பதட்டங்களும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது
எதிர்காலத்திலும் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனையை தொடரலாம் என்று கூறப்படுகிறது
