புதிய வாடகை விதிகள் என்னென்ன?
இந்தியாவின் புதிய வாடகை விதிகள் 2026-ன் படி, வாடகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு இடையிலான உறவை முறைப்படுத்தப் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் இதோ
இந்தியாவின் புதிய வாடகை விதிகள் 2026
வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குள் உரிமையாளர் நுழைய விரும்பினால், குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே வாடகைதாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை உயர்த்த முடியும். அதற்கு முன்னதாக 90 நாட்களுக்கு முன்பே முறையான அறிவிப்பை வழங்க வேண்டும்.
வீட்டு உரிமையாளர்கள் இரண்டு மாத வாடகைத் தொகைக்கு மேல் முன்பணமாக (Security Deposit) கேட்கக் கூடாது.
சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாடகைதாரர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டைக் காலி செய்ய வைக்க முடியாது.
வாடகை ஒப்பந்தங்கள் டிஜிட்டல் முத்திரை (Digitally Stamped) இடப்பட்டு, 60 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
வீட்டின் அத்தியாவசியப் பழுதுகளை 30 நாட்களுக்குள் உரிமையாளர் சரி செய்யவில்லை எனில், வாடகைதாரரே அதைச் செய்துவிட்டு அந்தச் செலவை வாடகையில் கழித்துக் கொள்ளலாம்.
தண்ணீர், மின்சாரத்தைத் துண்டிப்பது, பூட்டை மாற்றுவது அல்லது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வாடகைதாரரைத் துன்புறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
