Home செய்திகள் மகளிர் இட ஒதுக்கீடு: இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு!

மகளிர் இட ஒதுக்கீடு: இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளில் வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள் என்ற தற்போதைய சூழலை மாற்றும் வகையில், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ எனப்படும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 2023-ல் நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 4,666 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களில் வெறும் 464 பெண்கள் மட்டுமே உள்ள நிலையில், சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.

இருப்பினும், இந்த இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வராமல், 2026-ல் திட்டமிடப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை பணிகளுக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் பெண்களுக்கான இந்த முழுமையான இடஒதுக்கீடு அமலாகும் என்றாலும், தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களிலேயே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இந்திய அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version