எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன் மறைவையொட்டி, அவர் நினைவை போற்றும் வகையில் ஒரு புகழஞ்சலியும், படத்திறப்பு விழாவும் சென்னை மயிலாப்பூர் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் சிவக்குமார்,அபிராமி ராமநாதன், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா, காலச்சக்கரம் நரசிம்மா, மை.பா. நாராயணன், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவி பாலா உள்ளிட்ட ஏராளமான திரையுலகைச் சார்ந்தோரும், இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், கதாசிரியர்களும் பங்கேற்று அவரை நினைவு கூர்ந்தனர்.
