Home Uncategorized ஜெயலலிதா மீதான வழக்கில் தீபா மற்றும் தீபக் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

ஜெயலலிதா மீதான வழக்கில் தீபா மற்றும் தீபக் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் அவருடைய உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரை சேர்த்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, 2008-09 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், வருமான வரித்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.

செல்வ வரி வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரை சேர்த்தது.

Exit mobile version