காங்கிரஸ் கட்சி முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் – டி.ராஜேந்தர்
நேற்று அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னையில் தியாகராய நகரில் நேற்று அவரது திருவுருவ படத்திற்கு நடிகர் விஜய டி.ராஜேந்தர் மலர்த் தூவி மரியாதை செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள பாமரனை கூட கட்சியில் இணைத்தவர் அறிஞர் அண்ணா. இதுவரை அண்ணா தொடங்கிய திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது.
