கொல்லத்தில் முழு டிஜிட்டல் நீதிமன்றம்- 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நேற்று (20-ந்தேதி) முதல் செயல்பட தொடங்குகியது.
நாட்டிலேயே முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திறந்து வைத்தநிலையில் இப்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது.
இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
ஜாமின் பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராக தேவையில்லை.
அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
