Saturday, March 14, 2026
HomeUncategorizedகுடி'மக்கள் நலன் போற்றும் கர்நாடகா

குடி’மக்கள் நலன் போற்றும் கர்நாடகா

நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கிளப்புகள்,பார்கள் திறந்திருக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஹைடெக் நகரமான பெங்களூருவில் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதனால் எந்நேரமும் சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை காணலாம். இந் நிலையில், மாநில அரசின் வருவாயை மேலும் அதிகரிக்க, பெங்களூருவில் உரிமம் பெற்ற பார்கள், கிளப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான உத்தரவும் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, பப்கள், ரெஸ்டாரென்ட்களை அதிகாலை 2 மணி வரை திறந்து வைக்க அனுமதி கோரி ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments