Home Uncategorized அயோத்தி நகரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா –  அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு

அயோத்தி நகரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா –  அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அயோத்தி நகரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை நடத்த உத்தர பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.  அயோத்தி மேம்பாட்டு ஆணையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

வரும் 19 முதல் 21-ந் தேதிக்கு இடையில் இந்த பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version