ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தேர்வாகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வந்த சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
2004 முதல் 2019 தேர்தல் வரை ரேபரேலி தொகுதியில்(1999 அமேதி) சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
