தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மழலையர்கள் பள்ளிகளும் நவம்பர் 1-ந்தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், மழலையர் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
