நாம் முன்னோர்கள் பாரம்பரியமாக ஒரு தெய்வத்தை தம் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். அது அவரவர் சொந்த ஊர்களில் அமைந்திருக்கும், இந்த நவநாகரீக உலகில் வேலை காரணமாக வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் நாம், ஆண்டுக்கு ஒருமுறையாவது நமது குலதெயவத்தை போய் தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொள்ளவேண்டும். நம் எத்தனையோ தெய்வங்களை வணங்கினாலும், அது நமது குலதெய்வத்திற்கு ஈடாகாது.
