மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏராளமான பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில், தற்போது, தமிழக பாஜகவைச் சேர்ந்த இல.கணேசனுக்கு மணிப்பூர் ஆளுநராக பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். மேலும், தனது இளம் வயது முதலே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு சங்கத்திற்கு முழுநேர ஊழியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
