Home Uncategorized முருகன் ஆலயங்களில் சுற்றுலா- முன்பதிவு தொடக்கம்

முருகன் ஆலயங்களில் சுற்றுலா- முன்பதிவு தொடக்கம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில், ‘முருகன் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு’ நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத்திட்டத்தில், முருகன் கோயில்கள் கார்த்திகை மாத ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

சென்னையில் முருகன் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பஸ்கள் கந்தகோட்டம் முருகன் கோயில், தங்கசாலை – ஏகாம்பரேஸ்வரர் கோயில், சிறுவாபுரி- பாலமுருகன் கோயி, வடபழனி – தண்டாயுதபாணி கோயில், தேனாம்பேட்டை- பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயிகளுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

சென்னையில் முருகன் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்-2 ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பேருந்து வல்லக்கோட்டை- சுப்பிரமணியசுவாமி கோயில், குன்றத்தூர் -சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்போரூர்- கந்தசுவாமி கோயில், திருவான்மியூர்- அறுபடை வீடு கோயில், மருந்தீஸ்வரர் கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். முருகன் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com < http://www.ttdconline.com/ > மூலமாகவும் விவரங்களை பெறலாம்

Exit mobile version