Home செய்திகள் அரசு விழாக்களுக்கு புதிய நடைமுறை: முதலில் மாநிலப் பாடல் கட்டாயம்!

அரசு விழாக்களுக்கு புதிய நடைமுறை: முதலில் மாநிலப் பாடல் கட்டாயம்!

அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இனிவரும் காலங்களில் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது முதலாவதாக அந்தந்த மாநிலத்தின் மாநிலப் பாடல் (State Song) இசைக்கப்பட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ (Vande Mataram) ஒலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக, ஒட்டுமொத்த நிகழ்வின் நிறைவாகத் தேசிய கீதமான ‘ஜன கண மன’ (Jana Gana Mana) இசைக்கப்பட வேண்டும் என்று இந்த நெறிமுறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் தேசியச் சின்னங்கள் மற்றும் பாடல்களுக்கான மரியாதையை முறைப்படுத்தவும், மாநில மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணும் வகையிலும் இந்த வரிசைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version