Home வணிகம் ஈரான் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு!

ஈரான் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு!

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பேரல் 78 டாலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக, எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இந்த புவிசார் அரசியல் பதற்றம் தணியாத பட்சத்தில், வரும் நாட்களில் கச்சா எண்ணெயின் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயருவது, இந்தியா போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளின் உள்நாட்டு எரிபொருள் விலை மற்றும் பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

Exit mobile version