நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ராக்காயி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு இதனை நேற்று வெளியிட்டுள்ளனர்.
படத்தின் டைட்டில் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நயன்தாரா, நீதி மட்டுமே நினைவாக இருக்கும் ஒரு இடத்தில், ஒரு தாய் தன் குழந்தையே உலகம் என நினைத்து வாழ்ந்தாள்.
ஆனால், ஒரு அரக்கனால் தன் மகளுக்கு துன்பம் வரும் என அறிந்த பின் அவள் ஓடி ஒளிந்துகொள்ள வில்லை. அதே சமயம் மகளுக்காக போராட அவள் தளர்ந்ததும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
