நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துப் போராட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (அக்.21) தொடங்கி வைத்தார்.
அவரது பிரச்சாரத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, “இன்னும் தமிழக அரசியலை சினிமா என்று நினைக்கிறார்கள். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு படம் காட்டுகிறார். இப்போது உதயநிதி ஸ்டாலின் கல்வி பட்டமே கேள்விக்குறியாக உள்ளது. அவர் எப்படி கல்வி பட்டம் பெற்றார்?தமிழக மக்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டனர், கையெழுத்து வாங்குவது பெரிய விஷயம் இல்லை, நீட் தேர்வுக்கு ஆதரவாக, 2 கோடி கையெழுத்து பெற முடியும்.
உதயநிதி ஸ்டாலின் முட்டையை பூஜ்ஜியமாகக் காட்டுகிறார். முட்டை என்பது ஓவல். ஓவலுக்கும் பூஜ்ஜியத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இது அவர்களுக்குத் தெரியாது” என்றார்.
