இயக்குனர், நடிகர் மற்றும் பாடலாசிரியரான பா.விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கிய அவர், தரிசனம் முடித்த பிறகு பக்தர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டார். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
