Monday, April 6, 2026
HomeUncategorizedபிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சண்டௌலியில் ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ளும் நிலையில் அதில் தனது சகோதரரருடன் இணைந்து கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இன்று உத்தரபிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க எதிர்நோக்கியிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். குணமடைந்தவுடன் யாத்திரையில் பங்கேற்பேன்” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments