கலியுகத்தில் ஒன்றுக்கொன்று முரணாகவும், பாவங்களெல்லாம் புண்ணியமாகவும், புண்ணிய காரியங்கள் யாவும் இகழத்தக்கதாகவும்
கருதப்படுகிறது.
இத்தகைய அவலநிலைகளைப் போக்க, ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம். அதன் அடிப்படையில் நமது புண்ணிய பாரதத்தில் வேதங்களின் சாராம்சங்களையும், நிலையாத வாழ்வில் நிலைத்து நிற்கும் தர்மத்தினையும், காலத்திற்கேற்ற பரிமாணத்தினை கனிந்த மொழிகளால் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த பல ஞானிகள் அவ்வப்போது தோன்றிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்கள் தங்களின் இறையனுபூதியினால் மானிட குலத்தினை அடுத்த நிலைக்கு மேம்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
