Home Uncategorized புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், மீண்டும் துவங்க உள்ளன.

புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், மீண்டும் துவங்க உள்ளன.

புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், இன்று மீண்டும் துவங்க உள்ளன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், இன்று முதல் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இன்று பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் அட்லஸ் வரைபட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, விடுமுறையிலேயே பாட புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், முதல் நாளான இன்று புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகள் மற்றும் உளவியல் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Exit mobile version