சபரிமலை சந்நிதானத்தில் பதினெட்டாம்படிக்கு பூஜை செய்யும் பொழுது சில நேரங்களில் மழை காரணமாக சிரமங்கள் ஏற்படுகிறது.
அதற்காக இதற்கு முன்பு அமைக்கப்பட்ட கண்ணாடிக் கூரை அகற்றப்பட்டு தற்பொழுது மழை வரும் காலங்களில் மூடியும் , மழை இல்லாத காலங்களில் திறந்தும் இருக்கும்படி புதிய கூரை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதற்காக 18-ம் படி அருகில் கல் தூண்கள் நிறுவப்பட்டுள்ளது.
