ஸ்ரீமதழகியசிங்கர் ஸ்ரீஸன்னிதி பரிவாரங்களுடன் பாங்காய் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளினார். ஆழ்வார் திருநகரிமில் நம் ஸ்ரீஅஹோபில மடத்தில் முகாமிட்டு, நம்மாழ்வார் திருநக்ஷத்ர உத்ஸவ முதல் மூன்று நாட்கள் ஆழ்வாரின் அனிதர அசாதாரண அனுக்ரஹங்களை ஸ்வீகரித்து, ஆளரி, ஆதிநாதன், ஆழ்வார் அனுக்ரஹங்களுடன் வைகாசி மகத் திருநாள் உத்ஸவம் கண்டு, வில்லிவலம் ஸ்ரீமதழகியசிங்கரின் வார்ஷிக திருவாராதனம் அனுஷ்டித்து ஜூன் மாதம் 5ம் தேதி ஸ்ரீஸன்னிதி பரிவாரங்களுடன் ஸஞ்சாரமாக ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளத் திருவுள்ளம் பற்றியாயிருக்கிறது.
