சென்னையில் 15.6.2021 முதல் 18.6.2021 வரை 14 இடங்களில் SBI ATMகளில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை அபகரித்த வழக்கில் தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, அரியானா மாநிலத்தில் அமிர் அர்ஷ் என்ற குற்றவாளியை கைது செய்து, ரூ.4 ½ லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் 5 குழுக்களாக சென்னையில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது.
