32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவியருக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் இயங்கும் 32 ஆயிரம் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த 40 லட்சம் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.
பள்ளிகளில் புதிய மாணவ மாணவிரை வரவேற்கவும் மலர் கொத்து கொடுத்து மகிழ்விக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளபடி காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இறை வணக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் திட்டமிட்ட படி நடந்தது.
