புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல், பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்களிடம் வாழ்த்து பெற்றார்.
பிரதமருக்கு திருநீறு அணிவிப்பு..!
“திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறுகாட்டி” என நாடாளும் பாண்டிய அரசருக்கு திருஞானசம்பந்தர் திருநீறு பூசியதைப் போல, பாரத தவப்பிள்ளை மோடிக்கு திருநீறு பூசி ஆசிர்வதித்தார் 27வது தருமை ஆதீன குருமகா சந்நிதானம்.
