Home Uncategorized சிவாஜியும், கட்டபொம்மனும்…!

சிவாஜியும், கட்டபொம்மனும்…!

இந்த கயத்தாறு என்னும் ஊரில், அப்போது அங்கே இருந்த ஒரு புளியமரத்தில்தான் இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில், ஆங்கிலேய ஆட்சியினை எதிர்த்து முழங்கிய, பாளையத்தரசர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். 

இது நடந்து இன்றோடு 221 ஆண்டுகள் கடந்து விட்டன. 

1760 ல் பிறந்த கட்டபொம்மன் 1799 – ல் அதாவது தனது அந்நிய ஆட்சியாளர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் 39 வது வயதில், நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்தார். அவரது உடலைத்தான்  தூக்கிலிட முடிந்தது. அவரின் நினைவுகளை மக்கள் மனதிலிருந்து தூக்கிவிட இயலாமல் போனது.  மதுரையிலிருந்து – திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியிலிருந்து 30 வது கிலோ மீட்டரில் அமைந்திருப்பது கயத்தாறு. இங்குதான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

 

Exit mobile version