Tuesday, June 16, 2026
Homeவானிலைமந்தமான தென்மேற்குப் பருவமழை; விரைவில் மழை மீண்டும் தீவிரமடையுமா?

மந்தமான தென்மேற்குப் பருவமழை; விரைவில் மழை மீண்டும் தீவிரமடையுமா?

ஜூன் மாதத்தின் இரண்டாவது பாதியில் நாம் இப்போது அடிெடுத்து வைத்துள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த தென்மேற்குப் பருவமழைப் பொழிவு இயல்பை விட 32 சதவீதம் குறைவாகவே உள்ளது. குறிப்பாகக் கடலோர கர்நாடகா, கொங்கன் மற்றும் கோவா போன்ற பகுதிகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான மழையே பதிவாகி இருக்கிறது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அந்தமானில் பருவமழை தொடங்கியதில் இருந்தே, அது பெரிய அளவில் வேகம் எடுக்காமல் மந்தமாகவே இருந்து வருகிறது. தற்போதைய ஒட்டுமொத்த வளிமண்டலச் சுழற்சியைக் கவனிக்கும் போது, வரும் நாட்களிலும் இதே மந்தநிலை தொடரக்கூடும் என்றே தோன்றுகிறது.

இருப்பினும், அடுத்த வாரத்தில் தீபகற்ப மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பருவமழை மீண்டும் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் ஒட்டுமொத்த பருவமழைப் பொழிவு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதில், இனி வரவிருக்கும் ஜூலை மாதத்தின் மழைப் பொழிவு மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

உள்ளூர் வானிலையைப் பொறுத்தவரை, தீபகற்ப இந்தியப் பகுதிகளில் வழக்கத்தை விட வறண்ட சூழல் நிலவுவதால், தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், நாளை மற்றும் நாளை மறு நாள் மேலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மாதிரிகள் காட்டுகின்றன.

சென்னையின் இந்த நீண்ட நாள் வறண்ட வானிலை விரைவில் முடிவுக்கு வந்து நல்ல மழை பெய்யும் என்று நம்புவோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments