தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினாலும், அதிர்ஷ்டவசமாக இந்த இயற்கைச் சீற்றத்தால் பெரிய அளவில் உயிரிழப்புகளோ அல்லது கடுமையான பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) எனப்படும் நில அதிர்வு மண்டலத்தில் சிலி நாடு அமைந்துள்ளதால் அங்குத் தொடர்ச்சியாக இத்தகைய நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்தாலும், தற்போதைய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி போன்ற கடலலை எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், அவசரக்கால மீட்புக் குழுவினர் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
