இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்குப் பரஸ்பர ஒப்புதலின் மூலம் சுமூகமான தீர்வு காண்பதற்காக, ‘சமாதான் சமாரோஹ் 2026’ என்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற (Special Lok Adalat) முன்னெடுப்பு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதியை எளிய மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கில், கடந்த ஏப்ரல் 21 அன்று தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வுத் தளம், வரும் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்துடன் நிறைவடைகிறது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நேரடியாகவோ அல்லது இணையதளக் காணொளி (Video Conferencing) வாயிலாகவோ ஆஜராகி தங்களது வழக்குகளைச் சமரசமாக முடித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.sci.gov.in) கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை (Google Form) வரும் ஜூலை 31, 2026-க்குள் பூர்த்தி செய்து தங்களின் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கூடுதல் தகவல்களுக்குச் சிறப்பு உதவி எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் (speciallokadalat2026@sci.gov.in) தொடர்பு கொள்ளலாம் எனவும் பொதுநலன் கருதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

