டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு நடத்தி வருகிறது. சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே அலுவலகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை. மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை மோசடி என சோதனை நடத்திய அமலாக்கத் துறை முன்பு கூறியிருந்தது…

