Home Uncategorized தெலுங்கானா ஆம்புலன்ஸ் திருடன்

தெலுங்கானா ஆம்புலன்ஸ் திருடன்

இது ஹைதராபாத்- விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் ஒரு அதிரடி படப்பிடிப்பின் சேசிங் காட்சி அல்ல.

ஹயாத்நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸை திருடி சைரனை அடித்து அதிவேகமாக விஜயவாடா நோக்கி தப்பிச் சென்றான் திருடன். திருடனை பிடிக்க நெடுஞ்சாலையில் போலீசார் உஷார்படுத்தினர்.

போலீசார் ஆம்புலன்சை நிறுத்த முயன்றனர், ஆனால் திருடன் ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கேதேபல்லியில் உள்ள கோர்லபஹாட் என்ற இடத்தில் உள்ள டோல்கேட் மீது மோதிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

சூர்யாபேட்டையில் உள்ள தேக்குமட்லா என்ற இடத்தில் திருடன் இறுதியாக பிடிபட்டான்.

Exit mobile version