கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தன்கையில் துணிகளை சுற்றிக்கொண்டு அதன்மேல் தீ வைத்துக் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் வரைந்தார். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்
