Home Uncategorized தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 14,016 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 14,016 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 14,016 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

பயணிகள் வசதிக்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் திறப்பு. 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை உறுதி.

மக்கள் கூடுதல் கட்டணம் குறித்து 18004256151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்.

வரும் 24-ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை. தீபாவளி பயணத்திற்கு இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தீபாவளியின்போது மக்கள் வசதிக்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்தத்திற்கு எடுத்து அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் இயக்கப்படும் – எஸ்.எஸ்.சிவசங்கர்.

Exit mobile version