இயற்கை எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திய வண்ணமே உள்ளது. அதில் ஒன்று நீர் சம்பந்தமானது. பாலைவனத்தின் நடுவில் சோலை வனம் என்பது போல், உப்பு செறிந்த கடலுக்கு மிக அருகில் நல்ல தண்ணீர் ஊற்றாக கிடைப்பதுண்டு. இதனையே தமிழ்ப்பாட்டி ஒளவையார் தன்னுடைய நூலான ” மூதுரை ” யில் “….. ….. கடல் பெரிது மண்ணீரும் ஆகா (து); அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்…” என்றார். அத்தகைய சிற்றூறலைத்தான் நாம் திருச்செந்தூரில் ”நாழிக்கிணறு” என்கிறோம்.
