தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று (நவ.2) கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்திருந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அதிகாலை யாகசாலை பூஜையுடன் சஷ்டி விரதம் தொடங்கியது.
