திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் சுப்ரீம்.கோர்ட் நியமித்த குழு அதிகாரிகள் மூவர் உட்பட 11 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு தயாரிப்பதற்கு திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மூலம் நெய் அனுப்பப்பட்டது.
அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக பரிசோதனை மூலம் தெரிய வந்தது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் திருப்பதியில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
