திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹா தீபம் ஏற்றப் படவுள்ள கொப்பரை, கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்படும். திருக்கார்த்திகை அன்று அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், “ஏகன், அனேகன்” என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, ஆறு மணிக்கு, 2668.அடி உயர மலை உச்சியில், “அனேகன், ஏகன்” என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, ஆறு அடி உயர இராட்சதக் கொப்பரை புதுப்பிக்கப்பட்டு,மலை உச்சிக்கு அரோகரா முழக்கத்துடன் கொண்டு செல்லப்படும்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபமகாதீபக் கொப்பரைக்கும் ஒரு வரலாறு உண்டு
RELATED ARTICLES

